UPDATED : மே 30, 2026 10:19 PM
ADDED : மே 30, 2026 10:14 PM

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கான காரணத்தை கண்டறியும் எண்ணம் கூட மத்திய அரசுக்கு இல்லை. நம் நாட்டின் கல்வி அமைப்பு முழுமையாக மாபியாக்களின் பிடியில் சிக்கியுள்ளது. ஒருவர் மட்டும் தனித்து செயல்பட்டால், இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. நாட்டிற்கு ஒரு கல்வியறிவு பெற்ற பிரதமர் தேவை. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி கட்சி
சீர்குலைவு!
தங்களை விஸ்வகுரு என பறைசாற்றுவோரால், நீட், சி.பி.எஸ்.இ., என ஒரு தேர்வைக் கூட முறையாக நடத்த முடியவில்லை. பிரதமர் மோடி, ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் முழுமையாக சீர்குலைத்துவிட்டார். தன் அரசின் இருப்பைப் பற்றிய அக்கறை மட்டுமே அவருக்கு உள்ளதே தவிர, மாணவர்களின் எதிர்காலத்தை பற்றிய அக்கறை இல்லை. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
வெளியேற மாட்டேன்!
பாட்னாவில் நான் தங்கியுள்ள அரசு இல்லத்தை காலி செய்யும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே, அந்த இல்லத்தை விட்டு வெளியேற மாட்டேன். இந்த இடத்தை காலி செய்யவைக்க, அவர்கள் பெரும் படையை வரவழைத்தாலும், நான், அதே வீட்டிலேயே தொடர்ந்து தங்குவேன். ராப்ரி தேவி பீஹார் முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி
