UPDATED : செப் 08, 2026 11:06 PM
ADDED : செப் 08, 2026 08:14 PM
உத்தர பிரதேசத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பா.ஜ., அரசு மீட்டெடுத்துள்ளது. விரைவான தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாகவும் உருவெடுத்துள்ளது. தற்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. பெண்களுக்கோ, வர்த்தகருக்கோ அல்லது முதலீட்டாளருக்கோ அச்சுறுத்தல் விடுக்கும் மாபியா கும்பலுக்கு இங்கு இடமில்லை. யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
தோல்வியடைந்த அரசு!
விடுதி கட்டட விபத்தில், தாமதமாக செயலாற்றி டில்லி பா.ஜ., அரசு தோல்வி அடைந்துள்ளது. இது போன்ற விபத்துகளுக்கு முன், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அதன்பின் அரங்கேறும் விபத்துகளுக்கு அதிகாரிகள் மீது பழி போடுவதே பா.ஜ.,வின் பாணி. ஆனால், உண்மை குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
அக்கறை இல்லை!
சட்டசபை தேர்தலில் அளித்த ஆறு உத்தரவாதங்கள், 420 வாக்குறுதிகளை ஆளும் காங்., அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் பணியில் அக்கறை காட்டாமல், எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்வதிலும், சட்டவிரோதமாக சிறை பிடிப்பதிலும் தான் முதல்வர் ரேவந்த் ரெட்டி கவனம் செலுத்தி வருகிறார். கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி
