UPDATED : ஜூலை 23, 2026 09:35 PM
ADDED : ஜூலை 23, 2026 09:01 PM
வினாத்தாள் கசிவு விவகாரங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது மிகவும் வரவேற்புக்குரியது. நாட்டின் இளைஞர்களின் நல்வாழ்வும், அவர்களின் ஒளிமயமான எதிர்காலமுமே மத்திய அரசின் முன்னுரிமை என்பதற்கு இதுவே சான்று. அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
ஆணவ போக்கு! டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும். ஆணவப் போக்கை கைவிட்டு, ஜனநாயக முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மாணவர்களை ஒடுக்க நினைப்பது பலனளிக்காது. அரசு தன் தவறை உணர்ந்து பேச்சு நடத்த முன்வர வேண்டும். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி
பல மாநிலங்களில் பாதிப்பு! 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம், தற்போது அரசியல் வடிவம் பெற்று பெரிய பிரச்னையாக மாறி உள்ளது. இதனால், டில்லி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன. இதில் மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும். மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
