UPDATED : ஆக 30, 2026 08:36 PM
ADDED : ஆக 30, 2026 08:12 PM
தன் சுயசரிதை புத்தகத்தில் நீண்ட அரசியல் அனுபவங்களை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா அச்சமின்றி எழுதியுள்ளார். அவரது புத்தகம் வெளியானால் பா.ஜ., பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அதை வெளியிடவிடாமல், மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. பூபேஷ் பாகேல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர், காங்.,
அதிகாரிகளுக்கு கோரிக்கை!
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி செயல்படுத்துகிறார்கள். அரசியல்வாதிகள் தரும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் மக்கள் குறைகளை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும். எச்.டி. குமாரசாமி மத்திய அமைச்சர், மதச்சார்பற்ற ஜனதா தளம்
வழக்கு பதியவேண்டும்! உத்தரகண்டில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றிய மேடையை பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் சுத்தம் செய்தது குற்றம். பிரதமர் மோடி அரசியலமைப்பை மதிப்பவராக இருந்தால் இச்செயலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பிரியங்கா பொதுச்செயலர், காங்கிரஸ்
