sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் பதிலடி; கடற்படை தளபதி எச்சரிக்கை

/

இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் பதிலடி; கடற்படை தளபதி எச்சரிக்கை

இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் பதிலடி; கடற்படை தளபதி எச்சரிக்கை

இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் பதிலடி; கடற்படை தளபதி எச்சரிக்கை

5


UPDATED : டிச 07, 2025 04:12 PM

ADDED : டிச 07, 2025 03:52 PM

Google News

5

UPDATED : டிச 07, 2025 04:12 PM ADDED : டிச 07, 2025 03:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவை யாரும் அச்சுறுத்தினால், கடும் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவத்தினர் கொடி தினத்தை முன்னிட்டு கடற்படைத் தளபதி அட்மிரல் திரிபாதி கூறியதாவது: டில்லியில் மத்திய ஆயுதப்படை வாரியத்தால், இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. ஏற்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன். டில்லியின் துணைநிலை கவர்னர், முதல்வர் மற்றும் வாரியத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

சங்க உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகத்தின் பிற மக்களைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் குழந்தைகளின் நிகழ்ச்சியைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நமது ஆயுதப்படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை தொடர்ந்து பெருமையுடன் தேசத்திற்கு சேவை செய்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகள் நமது உறுதியைக் காட்டுகின்றன. இந்தியாவை யாரும் அச்சுறுத்தினால், கடும் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். இதை ஆபரேஷன் சிந்தூரின் போது நாங்கள் நிரூபித்தோம், எதிர்காலத்திலும் அதை நிரூபிப்போம்.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தாலும், அது இன்னும் முடிவடையவில்லை. அந்த நேரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த நாட்டின் மக்கள் ஆயுதப்படைகளைப் பற்றி பெருமைப்படுகிறார்கள் என்பதை நான் உணர்கிறேன். இவ்வாறு கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us