sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிக்கமகளூரில் நக்சல் நடமாட்டம்?

/

சிக்கமகளூரில் நக்சல் நடமாட்டம்?

சிக்கமகளூரில் நக்சல் நடமாட்டம்?

சிக்கமகளூரில் நக்சல் நடமாட்டம்?


ADDED : நவ 12, 2024 06:08 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டத்தில், மீண்டும் நக்சல் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

உடுப்பி, கார்கலாவின் ஈது கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கு இடமாக சிலர் நடமாடுவதாக தகவல் வந்தது. இவர்கள் நக்சலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, நக்சல் தடுப்புப் படையினர் அங்கு சென்று, பரவலாக தேடினர். கிராமத்தினரிடம் தகவல் சேகரித்தனர். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிக்கமகளூரு, கொப்பாவின் யககுந்தி கிராமத்தில் நக்சல்கள் ஊடுருவியதாக தகவல் வந்தது.

வனப்பகுதி ஆக்கிரமிப்பு, கஸ்துாரி ரங்கன் அறிக்கை குறித்து, கிராமத்தினருடன் நக்சல்கள் ஆலோசனை நடத்தியதாகவும், சில வீடுகளுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

சிக்கமகளூரு எஸ்.பி., விக்ரம் ஆம்டே மற்றும் நக்சல் தடுப்புப் படை எஸ்.பி., ஜிதேந்திரா தலைமையிலான அதிகாரிகள், சிக்கமகளுரு சென்று மக்களிடம் விசாரிக்கின்றனர்.

எடகுந்தி கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கிராமத்தில் நக்சல் தடுப்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.

'இதுவரை நக்சல்கள் இருப்பதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என, நக்சல் தடுப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us