sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு

/

நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு

நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு

நக்சல் அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்; அமித்ஷா இறுதி கெடு

7


ADDED : பிப் 16, 2026 01:15 PM

Google News

7

ADDED : பிப் 16, 2026 01:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் அதன் கடைசி கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார்.

டில்லி காவல்துறையின் 79வது நிறுவன தின விழாவில் அமித்ஷா பேசியதாவது: வரும் இரண்டு ஆண்டுகளில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும்.

போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐ ஆர் பதிவு செய்த பிறகு, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரை 3 ஆண்டுகளுக்குள் அளிக்கப்படும். இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும். குற்றவியல் வழக்குகளில் தண்டனை விகிதம் 80 சதவீதமாக உயரும்.

கடந்த 11 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள மைல்கற்களில் ஒன்றாகும். டில்லி போலீசார் எப்போதும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது கடமைகளை செய்து வருகின்றனர். 2014ம் ஆண்டுக்கு முன்பு, கடந்த நான்கு தசாப்தங்களாக நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு சவாலாக 4 பிரச்னைகள் இருந்தது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து, வடகிழக்கு மற்றும் நக்சலிசம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வன்முறை வழக்குகள் 80%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளன. நக்சல் வன்முறைக்கு எதிரான போராட்டம் அதன் கடைசி கட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நக்சல் அச்சுறுத்தல் முற்றிலுமாக முடிவுக்கு வரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us