sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிக்கமகளூரில் காணாமல் போன நக்சல் 20 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் கைது

/

சிக்கமகளூரில் காணாமல் போன நக்சல் 20 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் கைது

சிக்கமகளூரில் காணாமல் போன நக்சல் 20 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் கைது

சிக்கமகளூரில் காணாமல் போன நக்சல் 20 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் கைது


ADDED : பிப் 17, 2024 11:24 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு : சிக்கமகளூரிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன் தப்பி சென்ற நக்சல்வாதி சுரேஷ், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா, அங்கடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். நகசல்வாதியான இவர், மலைப் பிரதேச பகுதிகளில் பல்வேறு நக்சல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

அவரை பிடிக்க நக்சல் தடுப்பு படைகள் தேடி வந்தனர். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே, வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு தப்பி சென்றார்.

இவர் மீது, சிருங்கேரி போலீஸ் நிலையத்தில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரை போலீசார் தேடி வந்தனர். இவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரளாவின் கண்ணுாரில் வனப்பகுதியில் சுற்றி திறந்த போது, யானை தாக்கி படுகாயம் அடைந்த நபரை மீட்டு விசாரித்த போது, நக்சல்வாதி என்பது தெரிய வந்தது.

உடனே கர்நாடக போலீசார், கேரளா சென்று அவரை கைது செய்தனர். இவரை சிருங்கேரிக்கு அழைத்து வரும் நடைமுறைகள் நடந்து வருகின்றன. முக்கியமான நக்சல் பிரமுகரான இவரை கைது செய்ததன் மூலம், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us