sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது: கைதான மாணவர்கள் போலீசில் வாக்குமூலம்

/

தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது: கைதான மாணவர்கள் போலீசில் வாக்குமூலம்

தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது: கைதான மாணவர்கள் போலீசில் வாக்குமூலம்

தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது: கைதான மாணவர்கள் போலீசில் வாக்குமூலம்

9


UPDATED : ஜூன் 20, 2024 11:17 AM

ADDED : ஜூன் 20, 2024 11:08 AM

Google News

UPDATED : ஜூன் 20, 2024 11:17 AM ADDED : ஜூன் 20, 2024 11:08 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் தங்களுக்கு கிடைத்தது என பீஹாரில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

24 லட்சம் மாணவர்கள், மே 5ம் தேதி எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி எழுந்தது. நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக பீஹாரில் 3 மாணவர்கள் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நீட் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் கிடைத்தது. அதனை நன்கு படித்து தேர்வுக்கு தயாரானோம். இதில் இருந்த கேள்விகளே, மறுநாள் தேர்வு எழுத சென்ற போது கேட்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us