சிறுமியுடன் இளம்பெண் கொலை ரயில் நிலையத்தில் நேபாளி கைது
சிறுமியுடன் இளம்பெண் கொலை ரயில் நிலையத்தில் நேபாளி கைது
ADDED : மார் 10, 2026 03:00 AM

புதுடில்லி: கடந்த, 6ம் தேதி,உத்தர பிரதேசத்தின் ருத்ரபிரயாக்கின் கோட்வாலி போலீஸ் நிலைய பகுதியில் வீடு ஒன்றிலிருந்து, கெட்ட நாற்றம் வந்தது. அருகில் வசித்தவர்கள், போலீசாருக்கு தகவல்கொடுத்தனர்.
போலீசார் வந்து பார்த்த போது, அந்த வீட்டில் இருந்த, 38 வயது பெண்ணும், அவரின் மகளான சிறுமியும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த தீபக் பகதுார் என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரை காணவில்லை.
இதனால், அவரை உ.பி., போலீசார் தேடினர்.அவர், புதுடில்லி ரயில் நிலையம் பகுதியில் சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. டில்லி போலீசார்உதவியை, உ.பி.,போலீசார் நாடினர்.
அதன் படி, டில்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீபக் பகதுார் என்ற அந்த நேபாள நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை, உ.பி., போலீசார் வசம், டில்லி போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

