sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வருகிறது புதிய ஒய்வூதிய திட்டம் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ‛குட்' நியூஸ்

/

வருகிறது புதிய ஒய்வூதிய திட்டம் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ‛குட்' நியூஸ்

வருகிறது புதிய ஒய்வூதிய திட்டம் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ‛குட்' நியூஸ்

வருகிறது புதிய ஒய்வூதிய திட்டம் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ‛குட்' நியூஸ்

14


ADDED : ஆக 24, 2024 08:20 PM

Google News

ADDED : ஆக 24, 2024 08:20 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ‛‛ஒருங்கிணைந்த ஒய்வு திட்டத்திற்கு'' மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், நட்டா, அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஒய்வூய்திய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியது, ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஒய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வுக்கு முன்பாக சிறு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதிட்டத்தின் கீழ் 60 சதவீத ஒய்வூதிய பலனை அடைய முடியும் இதன் மூலம் 23 லட்சம் ஒய்வூதியர்கள் பலனடைவர்.

தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பையும், மத்திய அரசு 14 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது, புதிய ஒய்வூதிட்டத்தின் கீழ் மத்திய அரசு பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் . இத்திட்டம் 2025 ம் ஆண்டு ஏப்.01ம் தேதிமுதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்






      Dinamalar
      Follow us