தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது


UPDATED : டிச 18, 2019 03:35 PM

ADDED : டிச 18, 2019 03:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2019 03:35 PM ADDED : டிச 18, 2019 03:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன், சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார்.

தமிழகத்தின் கோவில்பட்டி அருகே உருளைக்குடி பகுதியை சேர்ந்தவர் சோ.தர்மராஜ் என்ற சோ.தர்மன். இவர், ஈரம், தூர்வை, சோகவனம், கூகை உள்ளிட்ட 7 நாவல்களை எழுதியுள்ளார். கூகை நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருதை வென்ற இவர், கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலையும், விவசாயிகளின் வேதனைகளையும் பதிவு செய்து 'சூல்' என்ற நாவலை வெளியிட்டார்.

Image 738922இந்நிலையில், தமிழில் சிறந்த நாவலாக 'சூல்' தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது குறித்து தர்மன் கூறுகையில், நான் நடிகர் அல்ல, எழுத்தாளன். சூரியகாந்தி போல அல்லாமல் மூலிகை போல இருப்பேன். எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். அங்கீகாரம் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. தற்போது மத்திய அரசிடம் இருந்தும் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us