sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

100 சதவீதம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது என்.ஐ.ஏ.,

/

100 சதவீதம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது என்.ஐ.ஏ.,

100 சதவீதம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது என்.ஐ.ஏ.,

100 சதவீதம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தது என்.ஐ.ஏ.,

7


ADDED : ஜன 01, 2025 11:37 AM

Google News

ADDED : ஜன 01, 2025 11:37 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'கடந்த 2024ம் ஆண்டில் என்.ஐ.ஏ., விசாரித்த குற்ற வழக்குகளில் 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் 100% பேரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம்' என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) தெரிவித்துள்ளது.

இது குறித்து, தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2024ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரித்த 80 வழக்குகளில், 210 பேர் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக இடதுசாரி பயங்கரவாதம் தடுப்பு நடவடிக்கையாக 28 வழக்குகள் பதியப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டில் ரூ.19.57 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வட கிழக்கு பிராந்திய கிளர்ச்சி சார்ந்த 18 வழக்குகள் பதியப்பட்டன. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். 408 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் 101 இடங்களில் சோதனையும், 14 பேர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.

நாட்டுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் ஜம்மு, ஜெய்பூர், ராஞ்சி, பாட்னா, சண்டீகர் ஆகிய பகுதிகளில் தேச விரோத சக்திகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 11 பேர், ஜம்மு காஷ்மீர் ஜிகாதிகள் 5 பேர் மற்றும் பிற ஜிகாதிகள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., விசாரித்த 25 வழக்குகளில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 68 பேர் தண்டிக்கப்பட்டனர்.

வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 100% பேரும் தண்டிக்கப்படுவதை என்.ஐ.ஏ., உறுதி செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us