sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரு பைசா கூட பயன்படுத்தாத கேரளா; பார்லியில் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

/

ஒரு பைசா கூட பயன்படுத்தாத கேரளா; பார்லியில் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஒரு பைசா கூட பயன்படுத்தாத கேரளா; பார்லியில் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஒரு பைசா கூட பயன்படுத்தாத கேரளா; பார்லியில் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

10


ADDED : மார் 23, 2026 12:50 PM

Google News

10

ADDED : மார் 23, 2026 12:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அரசின் ரூ.312 கோடி பேரிடர் நிதியை கேரள அரசு இதுவரை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக பார்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகம், கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார். அரசு திட்டமிட்டே நிபந்தனைகள் மற்றும் தாமதங்கள் மூலம் நிதியை முடக்குகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், குறிப்பாக கேரளா, மத்திய அரசு ஒதுக்கிய நிதியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தேசியப் பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூ. 311.95 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும், கேரள அரசு அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக நிலச்சரிவில் சிக்கி பாதிப்புக்குள்ளான வயநாடு பகுதியில் மீட்பு நடவடிக்கைகளுக்காக ரூ. 72 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நிதியைப் பயன்படுத்தவே இல்லை, என்று அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us