sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடிநீர் பிரச்னை தீர்க்க நிதி அசோக் வலியுறுத்தல்

/

குடிநீர் பிரச்னை தீர்க்க நிதி அசோக் வலியுறுத்தல்

குடிநீர் பிரச்னை தீர்க்க நிதி அசோக் வலியுறுத்தல்

குடிநீர் பிரச்னை தீர்க்க நிதி அசோக் வலியுறுத்தல்


ADDED : பிப் 20, 2024 07:04 AM

Google News

ADDED : பிப் 20, 2024 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் அரசை வலியுறுத்தினார்.

சட்டசபையில், ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், நேற்று அவர் பேசியதாவது:

கோடைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீரின்றி, மக்கள் புலம் பெயர்கின்றனர்.

எனவே, அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

கே.ஆர்.எஸ்., பத்ரா அணைகளில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. இது தொடர்பாக வல்லுனர்கள் ஏற்கனவே ஆதங்கம் வெளிப்படுத்தி உள்ளனர். அடுத்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது அணைகளில் தண்ணீர் அளவு மேலும் குறையும்.

எனவே இப்போதே அரசு விழித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே வறண்டுள்ள ஆழ்துளை கிணறுகளை பழுது நீக்காமல், பி.டி.ஏ., நிதியில் புதிதாக அமைப்பதற்கு அனுமதி தர வேண்டும்.

இதற்கு முன்பு, ஒரு டேங்கரின் விலை 500 ரூபாயாக இருந்தது. தற்போது, தண்ணீர் பிரச்னையால், மூன்று, நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதை தீவிரமாக கருதி, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us