sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆட்சியை தக்கவைக்க அதிரடி காட்டும் நிதிஷ்: பெண்கள், இளைஞர்களுக்காக தாராள சலுகை

/

ஆட்சியை தக்கவைக்க அதிரடி காட்டும் நிதிஷ்: பெண்கள், இளைஞர்களுக்காக தாராள சலுகை

ஆட்சியை தக்கவைக்க அதிரடி காட்டும் நிதிஷ்: பெண்கள், இளைஞர்களுக்காக தாராள சலுகை

ஆட்சியை தக்கவைக்க அதிரடி காட்டும் நிதிஷ்: பெண்கள், இளைஞர்களுக்காக தாராள சலுகை


ADDED : ஜூலை 18, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஹார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, மீண்டும் ஐக்கிய ஜனதா தள ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் நிதிஷ் குமார் எடுத்து வருகிறார்.

பீஹாரை பொறுத்தவரை ஒட்டுமொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். இதனால், அவர்களது ஓட்டுகளை அள்ள குறிவைத்திருக்கிறார் நிதிஷ்.

இதற்காகவே கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மிக முக்கியமான முடிவை அவர் எடுத்தார்.

இட ஒதுக்கீடு

மாநில அரசு வேலைகளில் பீஹார் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிக்க, நிதிஷ் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு முன் கூட, அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.

தற்போதைய முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தார், அம்மாநில முதன்மை செயலர் சித்தார்த். இதன் வாயிலாக, அரசு வேலைகளில் 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பீஹார் பெண்களுக்கு மட்டுமே என உறுதியாகியுள்ளது.

பிற மாநில பெண்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்தால் பொதுப் பிரிவு அடிப்படையிலேயே அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் எனவும் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னுரிமை

நிதிஷ் அரசின் இந்த முடிவால் இனி கல்வி, சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட துறைகளில் பீஹார் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். பெண் வாக்காளர்களுக்காக இப்படி தாராள திட்டத்தை அறிவித்த நிதிஷ், இளைஞர்களின் ஓட்டுகளையும் சிந்தாமல் சிதறாமல் பெற ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு. திறனை வளர்க்க விரும்பும் இளைஞர்களுக்காக, திறன் வளர்ப்பு பயிற்சியை அளிக்கும் பல்கலையை நிறுவப் போவதாகவும் நிதிஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 தேர்தலின்போது கூட பெண்கள், இளைஞர்களை குறிவைத்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார் நிதிஷ்.

அது அவருக்கு பெரிதாக கைகொடுக்க, இந்த முறையும், அதே அஸ்திரத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அது பலன் தருமா? தராதா? என்பது நவம்பருக்குள் தெரிந்துவிடும்.

வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம்

பீஹாரில், வீடுகளுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆக., 1 முதல் அமலுக்கு வருகிறது. இதனால், 1.67 கோடி குடும்பங்கள் பயனடைய உள்ளன. இதுகுறித்து நிதிஷ் வெளியிட்ட அறிக்கை: ஆரம்பம் முதலே ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலிவான விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். அந்த வகையில், ஆக., 1 முதல் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளோம். எனவே, ஜூலை மாத மின் கணக்கீட்டில் இருந்தே 125 யூனிட்கள் வரை மின் பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us