sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

/

இந்தியாவை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

இந்தியாவை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

இந்தியாவை எந்த நாடும் புறக்கணிக்க முடியாது; நிர்மலா சீதாராமன்

7


ADDED : அக் 24, 2024 07:55 AM

Google News

ADDED : அக் 24, 2024 07:55 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: பொருளாதார வலிமை கொண்ட இந்தியாவை, எந்த நாடும் புறக்கணிக்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில், உலக வளர்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தொலைதூர நாடான அமெரிக்காவாக இருக்கட்டும், அண்டை நாடான சீனாவாக இருக்கட்டும், எந்த ஒரு நாட்டினாலும், இந்தியாவை புறக்கணிக்க முடியாது. இந்தியா ஜனநாயகம் மிக்க நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், உலகில் உள்ள ஒவ்வொரு 6 நபர்களிலும் ஒரு இந்தியர் இருக்கிறார். எனவே, இந்தியாவின் பொருளாதாரத்தை நிராகரிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் மற்றும் மிகப்பெரிய நாடுகளில் செயல்படும் பெரிய நிறுவனங்களில் திறமை வாய்ந்த இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வளர்ச்சிக்கான பாதையை வரையறுக்கும் இடத்தில் நாம் இருக்கிறோமா? என்று கேட்டால், இந்தியாவைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தின் மூலம் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா சிறந்து விளங்குகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதல் பலதரப்பு வங்கி வரையில் அனைத்திலும் இந்தியா சிறந்த நாடாக இருந்து வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us