sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு பங்களா தேவையில்லை - சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் : முதல்வர் ஆதிஷி

/

அரசு பங்களா தேவையில்லை - சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் : முதல்வர் ஆதிஷி

அரசு பங்களா தேவையில்லை - சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் : முதல்வர் ஆதிஷி

அரசு பங்களா தேவையில்லை - சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம் : முதல்வர் ஆதிஷி

33


UPDATED : அக் 10, 2024 07:13 PM

ADDED : அக் 10, 2024 07:02 PM

Google News

UPDATED : அக் 10, 2024 07:13 PM ADDED : அக் 10, 2024 07:02 PM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பெரிய பங்களாவில் வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைபட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என டில்லி ஆம் ஆத்மி முதல்வர் ஆதிஷி கூறினார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கோர்ட் உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். செப்.21-ல் புதிய முதல்வராக ஆதிஷி பதவிறே்றார்.

இந்நிலையில் டில்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ பங்களாவான எண் 6, பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ளது. இங்கு கடந்த 6-ம் தேதி குடியேறினார் ஆதிஷி. நேற்று( அக்.,09) திடீரென அவரது உடமைகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டன. கட்டாயப்படுத்தி அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னணியில் துணை நிலை கவர்னரும், பா.ஜ.,வும் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்று( அக்.,10) முதல்வர் ஆதிஷி கூறியது, ஆப்ரேஷன் தாமரையை துவங்கிய பா.ஜ., எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாததால் மிகுந்த கவலையில் உள்ளது. இப்போது முதல்வர் இல்லத்தையும் பா.ஜ.வினர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர்.

சொகுசு காரில் செல்வதற்கும், அரசு பங்களாவில் வாழ்வதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம். மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us