sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அழைப்பிதழ் தேவையில்லை, ராமர் எங்கள் மனதில் உள்ளார்: திக்விஜய் சிங்

/

அழைப்பிதழ் தேவையில்லை, ராமர் எங்கள் மனதில் உள்ளார்: திக்விஜய் சிங்

அழைப்பிதழ் தேவையில்லை, ராமர் எங்கள் மனதில் உள்ளார்: திக்விஜய் சிங்

அழைப்பிதழ் தேவையில்லை, ராமர் எங்கள் மனதில் உள்ளார்: திக்விஜய் சிங்

14


ADDED : ஜன 03, 2024 01:48 PM

Google News

ADDED : ஜன 03, 2024 01:48 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் தேவையில்லை எனவும், கடவுள் ராமர் எங்கள் மனதில் உள்ளார் என்றும் காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது: எனக்கு அழைப்பிதழ் தேவையில்லை. கடவுள் ராமர் எங்களது மனதில் உள்ளார். பழைய ராமர் சிலை எங்கே? பழைய சிலையை ஏன் பிரதிஸ்டை செய்யவில்லை? புதிய ராமர் சிலை எங்கிருந்து வந்தது? புதிய சிலையை வைப்பதற்கான தேவை என்ன?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.






      Dinamalar
      Follow us