sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை: மாலத்தீவுக்கு உமர் அப்துல்லா 'குட்டு'

/

இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை: மாலத்தீவுக்கு உமர் அப்துல்லா 'குட்டு'

இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை: மாலத்தீவுக்கு உமர் அப்துல்லா 'குட்டு'

இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை: மாலத்தீவுக்கு உமர் அப்துல்லா 'குட்டு'


ADDED : ஜன 10, 2024 05:26 PM

Google News

ADDED : ஜன 10, 2024 05:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: மாலத்தீவு இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாலத்தீவு சீனாவுடன் எந்த வகையான உறவு வைத்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தியாவை அவமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலத்தீவு அரசு விமர்சித்த அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்து இந்திய பிரதமரிடம் மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம்.

மாலத்தீவு எந்த நாட்டுடன் எந்த மாதிரியான உறவில் இருக்க வேண்டும் என்பது அவர்களின் முடிவு. நமது நாட்டின் பிரதமர் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்தது முற்றிலும் தவறானது. அண்டை நாடுகளான மாலத்தீவு, நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நாம் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறவில்லை. இங்கு ஜனநாயகம் ஏன் படுகொலை செய்யப்படுகிறது?. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us