sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எச்.எம்.பி.வி., வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: நட்டா

/

எச்.எம்.பி.வி., வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: நட்டா

எச்.எம்.பி.வி., வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: நட்டா

எச்.எம்.பி.வி., வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: நட்டா

5


ADDED : ஜன 06, 2025 07:24 PM

Google News

ADDED : ஜன 06, 2025 07:24 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''சீனாவில் ஏற்பட்டுள்ள எச்.எம்.பி.வி., நோய்த்தொற்று தொடர்பாக யாரும் கவலைப்பட தேவையில்லை. மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது,'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா கூறினார்.

அவர் கூறியதாவது:

எச்.எம்.பி.வி., என்பது புதிய வைரஸ் அல்ல என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது, 2001ம் ஆண்டு முதலில் கண்டறியப்பட்டது. பல்லாண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த வைரஸ், காற்றின் மூலம், சுவாசத்தின் மூலம் பரவக்கூடியது. அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர் காலத்தில் தான் அதிகம் பரவும். வசந்தகாலத்தின் ஆரம்ப நாட்களிலும் பரவும்.

சீனாவில் சமீபத்தில் பரவி வரும் வைரஸ் தொடர்பான சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சார்பில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனமும் சூழலை மிகுந்த பொறுப்புடன் கண்காணித்து வருகிறது. விரைவில் அதன் அறிக்கையை நமக்கு அளிக்க இருக்கிறது. சுவாசக்கோளாறு தொடர்பான நோய்க்கிருமிகள் பாதிப்பில் திடீர் அதிகரிப்பு எதுவும் இந்தியாவில் இல்லை என்பது தரவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.நிலைமையை ஆய்வு செய்ய, சுகாதாரப்பணிகள் பொது இயக்குனர் தலைமையில் கூட்டுக்குழு கூட்டம் ஜன.,4ல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் முழுமையான கண்காணிப்பில் உள்ளனர்.

சுகாதார ரீதியில் ஏற்படக்கூடிய எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நிலைமை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாரும் கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு நட்டா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us