sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மம்தாவை இந்த முறை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறது பாஜ

/

மம்தாவை இந்த முறை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறது பாஜ

மம்தாவை இந்த முறை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறது பாஜ

மம்தாவை இந்த முறை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறது பாஜ


ADDED : ஜூலை 26, 2025 07:21 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 07:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இம்முறை யாரும் காப்பாற்ற முடியாது என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பீஹாரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சட்டவிரோதமாக ஊடுருவியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இதற்கு இண்டி கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் 1.25 கோடி சட்டவிரோத வாக்காளர்கள் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அம்மாநில பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேதினிபூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; பீஹாரில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது 50 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. வங்கத்தில் 1.25 கோடி இருக்கலாம். இவர்களில் பலர் வங்கதேசம், ரோஹிங்கியர்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு இவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

முதல்வரை (மம்தா) இம்முறை யாரும் காப்பாற்ற முடியாது. கள்ள ஓட்டு குறையும். ஊழல், கொள்ளையும் முடிவுக்கு வரும். நேர்மையாக செயல்படுங்கள், இல்லையெனில் மாவட்ட அதிகாரிகள் சிக்கலில் சிக்குவீர்கள், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us