எக்ஸ் வலைதள முகப்பு போட்டோவில் பயங்கரவாதி! ஷாக் ஆகி ஆக்சனில் இறங்கிய போலீஸ்
எக்ஸ் வலைதள முகப்பு போட்டோவில் பயங்கரவாதி! ஷாக் ஆகி ஆக்சனில் இறங்கிய போலீஸ்
ADDED : அக் 26, 2024 07:09 AM

நொய்டா: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் போட்டோவை தமது எக்ஸ் வலைதள முகப்பு போட்டோவாக வைத்திருந்த நொய்டா நபர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். அவனை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன. தற்போது தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நொய்டாவில் உள்ள ஒருவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய காரியத்தை செய்ய போலீசார் விழுந்தடித்து ஆக்சன் எடுத்துள்ளனர். நொய்டாவைச் சேர்ந்தவர் ஜூனைத் (எ) ரேஹான். இவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேடும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வைத்துள்ளார். அவரின் இந்தசெய்கை இணையதளங்களில் வெகு வேகமாக பரவியது.
போலீசார் கவனத்துக்கு இந்த விவரம் தெரிய வந்தது. உடனடியாக களத்தில் குதித்த போலீசார், ஜூனைத்தை தேடினர். நொய்டாவில் அவர் இருப்பது தெரியவர விசாரணை நடத்திய போலீசார், ஜூனைத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எதற்காக அவர் தாவூத் போட்டோவை வைத்துள்ளார், என்ன காரணம், அவரது பின்னணி என்பன உள்ளிட்ட கேள்விகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.