sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.99 கடன் பாக்கிக்கு ரூ.58,000 கேட்டு நோட்டீஸ்

/

ரூ.99 கடன் பாக்கிக்கு ரூ.58,000 கேட்டு நோட்டீஸ்

ரூ.99 கடன் பாக்கிக்கு ரூ.58,000 கேட்டு நோட்டீஸ்

ரூ.99 கடன் பாக்கிக்கு ரூ.58,000 கேட்டு நோட்டீஸ்


ADDED : பிப் 07, 2025 04:56 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: வெறும் 99 ரூபாய் கடன் பாக்கிக்காக, 58,000 ரூபாய் கேட்டு மைக்ரோ நிதி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் மைக்ரோ நிதி நிறுவனங்களின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கு கடிவாளம் போட அரசு சட்டம் வகுத்துள்ளது. துணை முதல்வர் சிவகுமாரும் மைக்ரோ நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிறுவனங்கள் பணிந்ததாக தெரியவில்லை. கடனை வசூலிக்கும் பெயரில் இம்சிக்கின்றனர்.

தாவணகெரேயில் வசிப்பவர் சந்திரசேகர். இவர், ஆன்லைன் வழியாக மைக்ரோ நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். மாதந்தோறும் கடன் தவணையை சரியாக கட்டினார். கடைசியாக 99 ரூபாய் பாக்கி இருந்தது. இதைப் பெற்று கொண்டு, 'கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்' தரும்படி கேட்டார்.

ஆனால் நிறுவனத்தினர், 58,000 ரூபாய் கட்டும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதை பார்த்து சந்திரசேகர் அதிர்ச்சி அடைந்துள்ளார். நிறுவனத்தின் அராஜகம் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுத, அவர் முடிவு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us