sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

/

தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


ADDED : பிப் 07, 2025 10:33 PM

Google News

ADDED : பிப் 07, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:''வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர் காங்., போட்டியிடும்'' என, அக்கட்சி தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி தெரிவித்தார்.

காங்., கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011 பிப்ரவரி 7ம் தேதி, என்.ஆர்.காங்., என்ற கட்சியை துவக்கினார். தற்போது, புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த என்.ஆர்.காங்., கட்சியின் 15வது ஆண்டு விழாவில், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிடும் என அக்கட்சி தலைவர் ரங்கசாமி அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, 'என்.ஆர்.காங்., தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்து கோரிக்கை வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்., போட்டியிடும். காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்' என்றார்.

த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட ரங்கசாமி திட்டம் வகுப்பதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us