sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு; இந்தியா முயற்சியில் போர் முடிவுக்கு வர வாய்ப்பு!

/

ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு; இந்தியா முயற்சியில் போர் முடிவுக்கு வர வாய்ப்பு!

ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு; இந்தியா முயற்சியில் போர் முடிவுக்கு வர வாய்ப்பு!

ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு; இந்தியா முயற்சியில் போர் முடிவுக்கு வர வாய்ப்பு!


UPDATED : செப் 13, 2024 08:57 AM

ADDED : செப் 13, 2024 07:56 AM

Google News

UPDATED : செப் 13, 2024 08:57 AM ADDED : செப் 13, 2024 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை தணிக்கவும், உறவு மேம்படுத்தும் என்கின்றர் அரசியல் நிபுணர்கள்.

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள 'பிரிக்ஸ்' அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மூன்று நாள் கூட்டம், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. இதில் பங்கேற்ற நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.

எல்லை பிரச்னை

மாநாட்டுக்கு இடையே இருவரும் இன்று தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேசினார். அப்போது, இரு நாட்டுக்கும் இடையேயான எல்லை பிரச்னை மற்றும் எல்லையில் உள்ள படைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தி உள்ளார்.

இருநாட்டு உறவு

இந்தியா-சீனா உறவு இருதரப்பு உறவை மேம்படுத்துவது, உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இரு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர். இந்தியா-சீனா உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, எல்லை பிரச்னைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

புடின்- அஜித் தோவல் சந்திப்பு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புடினை அஜித் தோவல் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி, தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மோடியின் அமைதித் திட்டத்தை, அஜித் தோவல் வழங்கியுள்ளார் என்றும், அது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






      Dinamalar
      Follow us