sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நேபாள மாணவி தற்கொலை விவகாரம்: ஒடிசா பல்கலை ஊழியர்கள் 5 பேர் கைது

/

நேபாள மாணவி தற்கொலை விவகாரம்: ஒடிசா பல்கலை ஊழியர்கள் 5 பேர் கைது

நேபாள மாணவி தற்கொலை விவகாரம்: ஒடிசா பல்கலை ஊழியர்கள் 5 பேர் கைது

நேபாள மாணவி தற்கொலை விவகாரம்: ஒடிசா பல்கலை ஊழியர்கள் 5 பேர் கைது


ADDED : பிப் 18, 2025 10:21 PM

Google News

ADDED : பிப் 18, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: நேபாள மாணவி தற்கொலை தொடர்பான மாணவர்கள் போராட்டங்களை அடுத்து ஒடிசா பல்கலை ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த நேபாள மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.

மாணவியின் தந்தை, அவரது முன்னாள் காதலன் அத்விக் ஸ்ரீவஸ்தவா தனது மகளை 'துன்புறுத்துவதாகவும், உணர்ச்சி ரீதியாக அச்சுறுத்துவதாகவும்' குற்றம் சாட்டினார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அத்விக் ஸ்ரீவஸ்தவா கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த சம்பவம் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட நேபாள மாணவர்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. கல்லூரி சில மாணவர்களை வெளியேற்ற முயன்றபோது பதட்டங்கள் அதிகரித்தன. நேபாள அரசு சார்பிலும் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேபாள மாணவர்கள் திரும்புவதற்கு வசதியாக பல்கலை வளாகம் 6ல் ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்தது.

நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியும், நாங்கள் மிகவும் வருந்துவதாகவும் பல்கலை தெரிவித்தது.

இதனையடுத்து இன்று வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாட்சிகள், காவல்துறையினரின் கூற்றுப்படி, காவலர்கள் மாணவர்களை தரக்குறைவாக பேசியதாகவும், தாக்கியதாகவும், காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினர்.

இதன் அடிப்படையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ராமகாந்த நாயக் மற்றும் ஜோகேந்திர பெஹெரா ஆகிய இரண்டு பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது பாரதிய நியாய சன்ஹிதா இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us