sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொந்த வீடு கட்டுவதற்கு மூன்று கற்கள் காணிக்கை

/

சொந்த வீடு கட்டுவதற்கு மூன்று கற்கள் காணிக்கை

சொந்த வீடு கட்டுவதற்கு மூன்று கற்கள் காணிக்கை

சொந்த வீடு கட்டுவதற்கு மூன்று கற்கள் காணிக்கை


ADDED : டிச 24, 2024 06:35 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்களுக்கு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தங்கம், வெள்ளி, வைரம் போன்றவை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஆனால், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் கற்களை காணிக்கையாக அளிக்கும், வினோதமான வழிபாடு கொண்ட கோவில் மாண்டியாவில் உள்ளது.

மாண்டியா தாலுகாவில் உள்ள கிரகந்துார் பெவினஹள்ளி சாலையில் அமைந்துள்ளது, 'கோடிகல்லின காடு பசப்பா சிவன் கோவில்'. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த கோவில் உள்ளது.

கோவில் என்றவுடன் பிரமாண்டமான கட்டடங்கள், கோபுரங்கள் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த கோவிலுக்கு அவை எதுவும் இல்லை. ஏன், பூஜாரி கூட கிடையாது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், தாங்களாகவே பூஜை செய்து கொள்ளும் சிறப்பும் இருக்கிறது.

கல்லால் செய்யப்பட்ட ஒரே ஒரு சிவலிங்கம் மட்டும் காட்சி அளிக்கிறது. கோவிலை சுற்றி ஏராளமான கற்குவியல்கள் காணப்படுகின்றன.

இக்கோவிலுக்கு ஆரம்ப காலத்தில் உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமே வந்து வழிபட்டு உள்ளனர்.

சொந்த வீடு கட்ட விரும்புவோர், இந்த கோவிலில் வேண்டுதல் வைக்கின்றனர். அவர்கள் வீடு கட்டி முடிந்தவுடன், வீடு கட்டிய நிலத்தில் இருந்து மூன்று அல்லது ஐந்து கற்களை காணிக்கையாக எடுத்து வந்து செலுத்துகின்றனர்.

பெரும்பாலானோர் வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், இந்த கோவிலின் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவியது.

தற்போது, பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

காணிக்கையாக செலுத்தும் கற்களுக்கு அளவு, வகை என எதுவுமில்லை.

இந்த சக்தி வாய்ந்த கோவிலுக்கு சென்று, உங்கள் வீடு கட்டும் கனவை நனவாக்குங்கள்.

செல்வது?

விமானம் மூலம் செல்வோர், முதலில் மைசூரு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து கோவிலுக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம்.ரயில் மூலம் செல்வோர், முதலில் மாண்டியா ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து ஒரு கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது; நடந்தே செல்லலாம்.பஸ்சில் செல்வோர், மாண்டியா பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ அல்லது டாக்சியில் செல்லலாம்.

-- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us