உ.பி.,யில் தீக்கிரையானது ஆம்னி பஸ் அதிர்ஷ்டவசமாக 39 பயணியர் தப்பினர்
உ.பி.,யில் தீக்கிரையானது ஆம்னி பஸ் அதிர்ஷ்டவசமாக 39 பயணியர் தப்பினர்
ADDED : அக் 26, 2025 11:42 PM
லக்னோ: ஆந்திராவில் ஏற்பட்டதை போல் உத்தர பிரதேசத்திலும் ஆம்னி பஸ் நேற்று தீக்கிரையானது. எனினும், அதில் சென்ற 39 பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டில்லியில் இருந்து உத்தர பிரதேசத்தின் கோ ண்டா பகுதிக்கு 39 பயணியருடன் படுக்கை வசதியுடைய தனியார் ஆம்னி பஸ் நேற்று அதிகாலை புறப்பட்டது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் உள்ள ரெவ்ரி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அந்தப் பஸ்சின் பி ன்பக்க டயரில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இ தைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர், உடனே பயணியரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, பஸ்சில் இருந்த பயணியர் அவசரமாக இறங்கினர். இதற்கிடை யே பஸ் முழுதும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொ ண்டு வந்தனர்.
இந்த விபத்தில், பஸ் முற்றிலும் சேதமடைந்தது. எனினும், முன்னெச்சரிக்கையாக பயணியர் அனைவரும் கீழே இறங்கியதால், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
இந்த விபத்தின் காரணமாக, ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பயணியர் மாற்று பஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டனர். தெ லுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு சென்ற ஆம்னி பஸ், ஆந்திராவின் கர்னுால் பகுதி அருகே, சமீபத்தில் விபத்துக்கு உள்ளானது.
இதி ல், 19 பயணியர் உடல் கருகி பலியாகினர். அதுபோன்று தனியார் பஸ் தீ விபத்தில் சிக்கியது, அதிர்ச்சியை ஏற்ப டுத்திஉள்ளது.

