sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அன்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் : இன்று ரயிலுக்காக காத்திருக்கும் பயணி

/

அன்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் : இன்று ரயிலுக்காக காத்திருக்கும் பயணி

அன்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் : இன்று ரயிலுக்காக காத்திருக்கும் பயணி

அன்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் : இன்று ரயிலுக்காக காத்திருக்கும் பயணி


ADDED : ஜன 14, 2024 09:03 PM

Google News

ADDED : ஜன 14, 2024 09:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: அன்றைய காலகட்டத்தில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் இன்று எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக சாதாரண பயணியாக காத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

மோடி அரசின் முதல் ஐந்தாண்டு கட்டமான 2014- 2019 ஆட்சியில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அசோக் கஜபதி ராஜூ.அரச குடும்பத்தை சேர்ந்த இவர் 2014 ம் ஆண்டு மே மாதம் 26 ம் தேதி முதல் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் 9 ம் தேதி வரையில் அமைச்சராக இருந்தார்.தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர் பா.ஜ., கூட்டணி அரசில் இடம் பெற்றார்.

இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்தார். அப்போது அவர் குடும்பம் செல்ல வேண்டிய ரயிலுக்காக ஸ்டேஷனில் காத்திருந்தார். இந்த போட்டோ சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் எக்ஸ் வலை தளத்தில் அவர் நேர்மையின் சின்னம், எப்போதும் மக்களுக்கு சிறந்ததை செய்கிறார். அதிகாரம் அவரை ஒரு போதும் கெடுக்கவில்லை என பதிவிட்டு உள்ளது. முன்னாள் அமைச்சரின் எளிமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பலர் விஜயநகரம் சாலைகளில் அவர் சாதாரணமாக சுற்றித்திரிவார் எனவும், எளிமையான மனிதர் , எளிமையோடு இணைந்த வாழ்க்கை வாழ்வதாக பதிவிட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us