sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலியல் தொழில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

/

பாலியல் தொழில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

பாலியல் தொழில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

பாலியல் தொழில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது


ADDED : டிச 24, 2024 06:30 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ஆந்திராவின் நெல்லுாரைச் சேர்ந்தவர் அனில்குமார் ரெட்டி, 47. பெங்களூரு டின் பேக்டரியில் மசாஜ் சென்டர் நடத்தினார். அங்கு விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 10 பேர் உட்பட 44 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெங்களூரு அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியது தெரிந்தது. அனில்குமார் ரெட்டி கைது செய்யப்பட்டார். மசாஜ் சென்டருக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, ஜாமினில் அனில்குமார் வெளியே வந்தார். அவர் மீண்டும் விபசார தொழில் செய்து வந்தார். மஹாதேவபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவானது.

அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி, போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு, ஒயிட்பீல்டு டி.சி.பி., சிவகுமார் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு தயானந்தா ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் அனில்குமார் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us