sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

/

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

13


UPDATED : செப் 18, 2024 03:57 PM

ADDED : செப் 18, 2024 03:13 PM

Google News

UPDATED : செப் 18, 2024 03:57 PM ADDED : செப் 18, 2024 03:13 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல் ' திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

கடந்த 2014 ம் ஆண்டு முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருந்தது.

இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றும் போது இந்த திட்டம் குறித்து வலியுறுத்தி பேசினார். சட்ட கமிஷனும் இது குறித்த அறிக்கைகளை விரைவில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படும்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ' ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த ராம்நாத் கோவிந்த்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இது குறித்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆலோசனைக்கு பிறகு 18, 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியமே. இதனை அமல்படுத்துவதற்கும், இதற்காக அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கவிழ்ந்தால் அல்லது தொங்கு சட்டசபை அமைந்தால் மீண்டும் தேர்தல் நடத்தலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



ஆதரவு

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ராம்நாத் கோவிந்த் குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். நீண்ட காலத்திற்கு ஜனநாயகத்தையும் தேசத்தையும் பாதிக்கும் விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இத்திட்டம், நமது நாட்டை வலுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us