sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 30 பேர் சுட்டுக்கொலை!

/

சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 30 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 30 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 30 பேர் சுட்டுக்கொலை!

1


UPDATED : மார் 20, 2025 07:10 PM

ADDED : மார் 20, 2025 01:33 PM

Google News

UPDATED : மார் 20, 2025 07:10 PM ADDED : மார் 20, 2025 01:33 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 30 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் - தந்தேவாடா எல்லையில், வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் நக்சலைட்டுகள் 30 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். இது குறித்து பிஜாப்பூர் எஸ்.பி., ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: இன்று பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்தவர்கள். அதுமட்டுமின்றி பிஜாப்பூர் மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us