ADDED : நவ 07, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியின் ரோகினியில் உள்ள அமன் விஹார் பகுதியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார் மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், கை வண்டி ஆகியவை சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
நேற்று முன் தினம் இரவு அமன் விஹார் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. சம்பவ இடத்தில் காயமடைந்த ஐந்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்தர் யாதவ், 53, என்பவர் உயிரிழந்தார்.
காயமடைந்த -- அருண் குமார், 38, ராகுல் சிங், 29, சச்சின், 18, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ஹிருத்யா ஜுனேஜா, 23, ஆகிய அனைவருக்கும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.