sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிபா வைரசுக்கு மேலும் ஒருவர் பலி; கேரளாவின் 6 மாவட்டங்களில் உஷார்

/

நிபா வைரசுக்கு மேலும் ஒருவர் பலி; கேரளாவின் 6 மாவட்டங்களில் உஷார்

நிபா வைரசுக்கு மேலும் ஒருவர் பலி; கேரளாவின் 6 மாவட்டங்களில் உஷார்

நிபா வைரசுக்கு மேலும் ஒருவர் பலி; கேரளாவின் 6 மாவட்டங்களில் உஷார்


ADDED : ஜூலை 15, 2025 06:07 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : கேரளாவில், நிபா வைரசுக்கு இரண்டாவது நபர் பலியானதை அடுத்து, பாலக்காடு, மலப்புரம் உட்பட ஆறு மாவட்டங்கள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன.

வவ்வால், பன்றி உட்பட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. இது, மூளை மற்றும் சுவாச மண்டலத்தை தாக்கி, உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கேரளாவின் மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.

வைரஸ் அறிகுறிகளுடன் பாலக்காட்டைச் சேர்ந்த 58 வயது நபர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் பலியானார்.

அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில், நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக, மலப்புரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 10 நாட்களுக்கு முன் பலியான நிலையில், தற்போது இரண்டாவது நபர் பலியாகி உள்ளார்.

இதற்கிடையே, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் இந்நோய் அறிகுறிகளுடன் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் நிபா வைரசால் பலியானோர் மற்றும் அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்த 500க்கும் மேற்பட்டோர், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, கண்ணுார், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

வவ்வால்களால் மக்கள் அச்சம்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழக- - கேரள எல்லைப் பகுதிகளில், மாநில சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாகனங்களில் வருவோரை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் அனுமதிக்கின்றனர். வவ்வால்கள் உமிழ்நீர் மற்றும் அவை ருசித்த பழங்கள் மூலம், 'நிபா' வைரஸ் தாக்கம் ஏற்படுவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வயநாடு அருகே தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் பந்தலுார் அருகே அதிக அளவில் வவ்வால்கள் முகாமிட்டுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.








      Dinamalar
      Follow us