sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 5வது நாளாக முடங்கியது லோக்சபா

/

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 5வது நாளாக முடங்கியது லோக்சபா

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 5வது நாளாக முடங்கியது லோக்சபா

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 5வது நாளாக முடங்கியது லோக்சபா

25


UPDATED : பிப் 06, 2026 01:40 PM

ADDED : பிப் 06, 2026 11:56 AM

Google News

25

UPDATED : பிப் 06, 2026 01:40 PM ADDED : பிப் 06, 2026 11:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது டில்லி நிருபர்

லோக்சபா இன்று (பிப்.,06) காலை 11 மணிக்கு கூடியதும், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சி தலைவருக்கு அவையில் பேச மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்தி, எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் 5வது நாளாக சபை முடங்கியது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ல் துவங்கியது. கடந்த 1ல், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.

பிரதமர் மோடியை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் பிரதமர் மோடியின் உரையின்றி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கம் போல லோக்சபா இன்று (பிப்.,06) காலை கூடியது.

8 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சி தலைவருக்கு அவையில் பேச மறுப்பு, இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியால் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது.

சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கே ட்கவில்லை. அமளி தொடர்ந்ததால், வரும் பிப்ரவரி 9ம் தேதி காலை 11 மணி வரை லோக்சபாவை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

சபாநாயகர் காட்டம்

எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா கண்டனம் தெரிவித்தார். அவர், ''19 மணி நேரம் மற்றும் 13 நிமிடங்கள் லோக்சபாவின் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்கள் அவை நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ய மக்கள் உங்களை லோக்சபாவுக்கு அனுப்பவில்லை. அவை நேரம் வீணாவதால் பல உறுப்பினர்களுக்கு பேசும் வாய்ப்புகள் பாழாகின்றன'' என தெரிவித்தார்.



அதேநேரத்தில் காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அங்கு அலுவல் நடந்தது. பின்னர் எம்பிக்கள் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us