sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்

/

பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்

பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்

பார்லி வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 6வது நாளாக இன்றும் போராட்டம்

3


ADDED : ஜூலை 28, 2025 11:17 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 11:17 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் வளாகத்தில் 6வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 21ல் துவங்கியது. லோக்சபா, ராஜ்யசபாவில் முதல் நாளே அமளியில் குதித்த காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பஹல்காம் தாக்குதல், 'ஆபரேஷன் சிந்துார்' குறித்து விவாதம் நடத்த வேண்டும், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது' என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், இரு சபைகளிலும் அலுவல்கள் முடங்கின.

'ஆபரேஷன் சிந்துார் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார்' என, பலமுறை தெரிவித்தும் கூட அமளியில் ஈடு படுவதை எதிர்க்கட்சிகள் விடவில்லை. கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து, இரு சபைகளிலும் இதுவரை எந்த அலுவல்களும் நடக்கவில்லை. எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால், பார்லி., முடங்கி உள்ளது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பார்லிமென்டை சுமூகமாக நடத்த ஒப்புக் கொண்டன. இதனால், இன்று இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் 6வது நாளாக இன்று எதிர்க்கட்சிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பதாகைகளை ஏந்தியவாறு, பீஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், பார்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.






      Dinamalar
      Follow us