sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திட்டமிட்டு பொய் பரப்பும் எதிர்க்கட்சிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி குற்றச்சாட்டு

/

திட்டமிட்டு பொய் பரப்பும் எதிர்க்கட்சிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி குற்றச்சாட்டு

திட்டமிட்டு பொய் பரப்பும் எதிர்க்கட்சிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி குற்றச்சாட்டு

திட்டமிட்டு பொய் பரப்பும் எதிர்க்கட்சிகள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி குற்றச்சாட்டு

5


ADDED : ஜூலை 10, 2024 02:52 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 02:52 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன' என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோகோ பைலட்டுகளுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் 34 ஆயிரம் பேர் ரயில்வேயில் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது 18 ஆயிரம் ஊழியர்களுக்கான ஆட் சேர்ப்பு பணிகள் நடைபெறுகிறது.

லோகோ பைலட்டுகள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. அவசர காலங்களில் மட்டுமே லோகோ பைலட்டுகளின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும். அவர்களின் பணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.

லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு ரயில்களில் ரயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us