sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் எதிர்க்கட்சிகள்: பவன் கல்யாண் காட்டம்

/

அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் எதிர்க்கட்சிகள்: பவன் கல்யாண் காட்டம்

அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் எதிர்க்கட்சிகள்: பவன் கல்யாண் காட்டம்

அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் எதிர்க்கட்சிகள்: பவன் கல்யாண் காட்டம்

6


ADDED : ஜூலை 31, 2025 09:25 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 09:25 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: இந்தியாவை உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், குறைத்து மதிப்பிடும் எதிர்கட்சிகளை கண்டித்தும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பவன் கல்யாண் பதிவிட்டுள்ளதாவது:

சிறு,மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, மருந்து மற்றும் விவசாயம் ஆகியவற்றை வலுப்படுத்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

10வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது 4வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வலுவாக செயல்படுகிறது, தேசிய நலன்களைப் பாதுகாக்கிறது, சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியாது.

இந்தோ-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் கவனக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். எதிர்கட்சிகளின் வார்த்தைகள், இந்தியாவின் கண்ணியத்தை சேதப்படுத்துவதாகவும், அமெரிக்க நலன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து இந்தியாவின் உலகளாவிய நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் கவனக்குறைவான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர், அவர்கள் அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்வதாகத் தெரிகிறது.

இது புதிய இந்தியா, இனி தலைவணங்கும் நாடு அல்ல. தெளிவுடன் பேசி, தேசிய நலன்களுக்காக செயல்படும் நாடு. எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல், அனைத்து குடிமக்களுக்கும் நெகிழ்ச்சியான, தன்னம்பிக்கை கொண்ட பொருளாதார எதிர்காலத்தை உருவாக்குவதில் என்டிஏ அரசு கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது.

இவ்வாறு பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us