sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உணவு பொருட்களில் புழு விசாரணைக்கு உத்தரவு

/

உணவு பொருட்களில் புழு விசாரணைக்கு உத்தரவு

உணவு பொருட்களில் புழு விசாரணைக்கு உத்தரவு

உணவு பொருட்களில் புழு விசாரணைக்கு உத்தரவு

3


ADDED : நவ 09, 2024 01:08 AM

Google News

ADDED : நவ 09, 2024 01:08 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்களில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவின் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், அருகில் உள்ள உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியால் நிர்வகிக்கப்படும் மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, உணவில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us