sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 கவிதாவின் புதிய கட்சி பதிவு விரைந்து முடிவெடுக்க உத்தரவு

/

 கவிதாவின் புதிய கட்சி பதிவு விரைந்து முடிவெடுக்க உத்தரவு

 கவிதாவின் புதிய கட்சி பதிவு விரைந்து முடிவெடுக்க உத்தரவு

 கவிதாவின் புதிய கட்சி பதிவு விரைந்து முடிவெடுக்க உத்தரவு


ADDED : மார் 20, 2026 05:55 AM

Google News

ADDED : மார் 20, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா துவக்கியுள்ள தெலுங்கானா ஜாக்ருதி என்ற புதிய கட்சியை பதிவு செய்வது தொடர்பாக விரைவாக முடிவெடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானாவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, கவிதா நடத்தி வந்த தெலுங்கானா ஜாக்ருதி என்ற கலாசார அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். கட்சியை பதிவு செய்ய தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்து இருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் மீது நீண்ட நாட்களாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா வழக்கு தொடர்ந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அமித் பன்சால், அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடைமுறையில் தேவையற்ற காலதாமதம் இருக்கக்கூடாது.

மனுதாரரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக முடிவெடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார்.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us