sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி

/

அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி

அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி

அடங்காமல் ஆடும் பாகிஸ்தான் ராணுவம்; 5வது நாளாக எல்லையில் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி

7


ADDED : ஏப் 29, 2025 09:46 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:46 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: தொடர்ந்து 5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர்.

சந்தேக நபர்கள், இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களிலும், அக்னூர் செக்டாரிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில், 5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

சிறிய ரக துப்பாக்கியால் சுட்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவும் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நீடிப்பதால் கண்காணிப்பை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது.






      Dinamalar
      Follow us