sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய துாதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்

/

இந்திய துாதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்

இந்திய துாதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்

இந்திய துாதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்

1


ADDED : மே 23, 2025 01:25 AM

Google News

ADDED : மே 23, 2025 01:25 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாகக் கூறி, பாகிஸ்தான் துாதரக ஊழியர் ஒருவரை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியேற்றிய நிலையில், நேற்று பாகிஸ்தான், இந்திய துாதரக ஊழியர் ஒருவரை, உளவு பார்த்ததாகக் கூறி வெளியேற்றி உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது.

தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தம் அறிவித்துள்ளன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், டில்லியில் செயல்படும் பாகிஸ்தான் துாதரகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரை, மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியேற்றியது. உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தான் அரசு நேற்று, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய துாதரக ஊழியர் ஒருவரை, உளவு பார்த்ததாகக் கூறி வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என, அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us