sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பாக்., உளவாளி கைது

/

இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பாக்., உளவாளி கைது

இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பாக்., உளவாளி கைது

இந்திய தூதரகத்தில் பணியாற்றிய பாக்., உளவாளி கைது

13


UPDATED : பிப் 04, 2024 03:38 PM

ADDED : பிப் 04, 2024 12:39 PM

Google News

UPDATED : பிப் 04, 2024 03:38 PM ADDED : பிப் 04, 2024 12:39 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,க்காக உளவு பார்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உ.பி.,யின் ஹாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மல்டி டாஸ்கிங் பிரிவு அதிகாரியாக இருந்து வருகிறார். இவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்காக உளவு பார்த்ததாக உ.பி., பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சத்யேந்திர சிவலை கைது செய்து விசாரணை நடத்தினர். முதலில் உளவு அமைப்புடன் உள்ள தொடர்பை மறுத்துள்ளார். பிறகு, ஆதாரங்களை வைத்து போலீசார் துருவித்துருவி விசாரணை செய்ததில், சத்யேந்திர சிவல் உண்மையை ஒப்புக் கொண்டார்.

தூதரகத்தில் பணியாற்றிய காலத்தில், இந்தியா குறித்த ரகசிய தகவலை பாகிஸ்தானுக்கு கொடுத்ததும், இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து, பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகள், அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பெற்றும், இந்திய தூதரகம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us