sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை

/

காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை

காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை

காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை

1


UPDATED : மே 06, 2025 05:04 PM

ADDED : மே 06, 2025 04:11 PM

Google News

UPDATED : மே 06, 2025 05:04 PM ADDED : மே 06, 2025 04:11 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​ மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான்- இந்தியா இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​ மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதி வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் கைது செய்தது.

அந்த நபருக்கு 25 வயது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது நோக்கங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us