ADDED : மார் 13, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை:பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மார்ச் 25 -வரை நடை திறந்திருக்கும்.
இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
பங்குனி உத்திர திருவிழா மார்ச் 16ல் தொடங்குகிறது. வரும் 24 இரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடக்கும். வரும் 25 காலை 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும், கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்று, நடை அடைக்கப்படும்.

