sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு ஏப்.,14 தங்க டாலர் விற்பனை தொடக்கம்

/

பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு ஏப்.,14 தங்க டாலர் விற்பனை தொடக்கம்

பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு ஏப்.,14 தங்க டாலர் விற்பனை தொடக்கம்

பம்பையில் ஆராட்டுடன் சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு ஏப்.,14 தங்க டாலர் விற்பனை தொடக்கம்


ADDED : ஏப் 12, 2025 02:32 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:சபரிமலையில் 10 நாட்கள் நடந்த பங்குனி உத்திர திருவிழா நேற்று ஆராட்டுடன் நிறைவு பெற்றது. ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை ஏப்.,14 சபரிமலையில் தொடங்குகிறது.

பங்குனி உத்திர திருவிழா ஏப்.,2 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவபலி, ஸ்ரீ பூதபலி போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நடந்தது. 9-ம் நாள் விழாவில் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளினார். நள்ளிரவில் சுவாமி சன்னிதானம் திரும்பினார்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை கோயிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பூஜைகள் நடந்தன. 8:00 மணிக்கு ஆராட்டுப்பவனி பம்பைக்கு புறப்பட்டது. 11:45 மணிக்கு பம்பை நதிக்கரையில் ஆராட்டு விக்ரகத்துக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்த பின்னர் விக்கிரகத்துடன் பூஜாரிகள் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர் அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கினர்.

மதியம் 3:00 மணிக்கு ஆராட்டுபவனி சன்னிதானத்திற்கு புறப்பட்டது. இரவு 8:30 மணிக்கு சன்னிதானம் வந்ததும் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. இன்று முதல் சித்திரை விசு கால பூஜைகள் தொடங்குகிறது.

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஏ.ப்.,14 முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 1,2,4,6,8 கிராம் எடைகளில் 916 ஹால்மார்க் முத்திரையுடன் இந்த டாலர்கள் கிடைக்கும். ஆன்லைன் மூலமும் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணம் செலுத்தியும் இந்த டாலர்களை பெற முடியும்.






      Dinamalar
      Follow us