sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பரோலில் வந்த கைதி மருத்துவமனையில் கொலை: பீஹாரில் போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்

/

பரோலில் வந்த கைதி மருத்துவமனையில் கொலை: பீஹாரில் போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்

பரோலில் வந்த கைதி மருத்துவமனையில் கொலை: பீஹாரில் போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்

பரோலில் வந்த கைதி மருத்துவமனையில் கொலை: பீஹாரில் போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்


ADDED : ஜூலை 19, 2025 06:53 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 06:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் குற்றவாளி கொல்லப்பட்ட வழக்கில் கடமையில் அலட்சியமாக செயல்பட்ட போலீசார் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவில், நேற்று முன்தினம் சந்தன் மிஸ்ரா என்ற குற்றவாளி, சிறையிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக, பரோலில் வெளியே வந்தார்.சந்தன் மிஸ்ரா பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் மர்மநபர்கள் 5 பேர் சந்தன் மிஸ்ரா இருந்த அறைக்குள்ள புகுந்து அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, போலீசார் 5 பேர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது குறித்து பாட்னா(மத்திய) எஸ்.பி., தீக்ஷா கூறியதாவது:

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் ஒரு துணை எஸ்.ஐ., மற்றும் இரண்டு ஏ.எஸ்.ஐ.,க்கள் அடங்குவர். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பயணியாற்றியவர்கள். இவர்கள், நேற்று முன்தினம் உயர் தனியார் மருத்துவமனையில் குற்றவாளி சந்தன் மிஸ்ரா கொலை செய்யப்பட்ட வழக்கில், கடமை தவறியதற்காக, அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தீக்ஷா கூறினார்.






      Dinamalar
      Follow us