sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிளாஸ்டிக் பேப்பரில் ரோஜா வியாபாரிகளுக்கு அபராதம்

/

பிளாஸ்டிக் பேப்பரில் ரோஜா வியாபாரிகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக் பேப்பரில் ரோஜா வியாபாரிகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக் பேப்பரில் ரோஜா வியாபாரிகளுக்கு அபராதம்

1


ADDED : பிப் 17, 2024 05:26 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : காதலர் தினத்தன்று, பிளாஸ்டிக் பேப்பரில் பூக்களை சுற்றிக் கொடுத்த வியாபாரிகளுக்கு, பெங்களூரு மாநகராட்சி 'ஷாக்' கொடுத்துள்ளது.

பெங்களூரில் பிளாஸ்டிக் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு, மாநகராட்சி தடைவிதித்து பல ஆண்டாகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி, டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்; அபராதம் விதிக்கின்றனர்.

ஆனாலும் பிளாஸ்டிக்க பயன்பாடு தொடருகிறது.

காதலர் தினத்தன்று, பெங்களூரில் லட்சக்கணக்கான ரோஜா பூக்கள் விற்பனை ஆனது. பூக்களை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு, மாநகராட்சி 'ஷாக்' கொடுத்துள்ளது.

தடையை மீறி பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி, ரோஜாக்களை விற்றதால் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுவரை 959 பூ வியாபாரிகளிடம், 2.46 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆங்காங்கே சோதனை நடந்து வருகிறது.

ரோஜாக்கள் விற்றதில் நல்ல லாபம் கிடைத்தது என, வியாபாரிகள் குஷியடைந்தனர்.

ஆனால், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி கொடுத்தவர்கள் அபராதம் செலுத்த வேண்டி உள்ளது.






      Dinamalar
      Follow us