sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்குப் பதிலாக பேனாவும், புத்தகமும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

/

காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்குப் பதிலாக பேனாவும், புத்தகமும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்குப் பதிலாக பேனாவும், புத்தகமும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்குப் பதிலாக பேனாவும், புத்தகமும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

4


ADDED : செப் 19, 2024 02:34 PM

Google News

ADDED : செப் 19, 2024 02:34 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், நோட்டுப் புத்தகங்களும் இருப்பதாகக் கூறி பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மிரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாமல் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. மக்கள் தைரியமாக வீடுகளை விட்டு வெளியே வந்து ஓட்டு போட்டுள்ளனர். இதுவரையில் நடைபெற்ற 7 தேர்தல்களுடன் ஒப்பிடும் போது, நேற்று நடந்த தேர்தலில் தான் அதிகபட்சமாக 60.21 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுயநல அரசியலால், காஷ்மீரில் உள்ள இந்துக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ளனர். காஷ்மிரில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க தீவிரமாக உள்ளன. இந்த 3 கட்சிகளும் காஷ்மீருக்கு அழிவைத் தந்துள்ளன. இந்த கட்சிகள் இந்துக்கள், சீக்கியர்களுக்கு எதிராக அநீதியை இழைத்துள்ளன. முன்பு லால் சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றுவதற்கே அச்சுறுத்தல் இருந்து வந்தது. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவித்து இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதே பா.ஜ.,வின் நோக்கமாகும், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us